|
|
Resize Text - கவலை & பயம்கவலைகள், பதற்றம், பயங்கள் ஆகியவை ஏற்பட ஏதும் ஒரு சம்பவம் தூண்டுதலாக அமைகிறது. நாம் அந்தச் சம்பவத்தை மறக்கும் வரை, அவை நம் எண்ணத்தையும் செயல்களையும் பல மணி நேரத்திற்கு, ஏன் சில நாட்களுக்குக்கூட ஆக்கிரமிக்கின்றன. இந்த உணர்வுகள் தவறான, பொருத்தமில்லாத ஞாபகங்கள், எதிர்பார்ப்புகள், தகவல்களை வைத்து உருவாகின்றன. நம் இயல்பான வெளிப்பாடு பாதிக்காமல் நம் உணர்வுகளின் மீதும் சூழலின் மீதும் கட்டுப்பாட்டை மீட்க முடியும். உங்கள் கவலைகளிலிருந்தும் பதற்றங்களிலிருந்தும் விடுபட சில குறிப்புகள்:
உங்களுடைய செயல்களால், உங்கள் கவலைகளின் அழுத்தத்தைக் குறைக்க முடியவில்லையென்றால் ஒரு புரொஃபஷனலான ஆலோசகரைச் சந்திப்பதைப் பற்றி யோசியுங்கள். நல்ல ஆலோசகரால் உங்கள் பதற்றத்தை அடையாளம் கண்டு, மீட்க முடியும். உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருந்தால், உங்களால் மாற்ற முடியாததை ஏற்றுக்கொள்வதற்கான தைரியத்தைக் கேளுங்கள். மாற்றக் கூடியதை மாற்றுவதற்கான துணிச்சலைக் கேளுங்கள். இரண்டையும் வித்தியாசப்படுத்திப் பார்க்கும் அறிவைக் கேளுங்கள். |